×

தொடரும் அட்டூழியத்தால் குடும்பத்தினர் அச்சம் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம்

காரைக்கால்: காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை வீரர்கள் தாக்குதல்  நடத்தினர். இதில் 15 மீனவர்கள் படுகாயமடைந்தனர். காரைக்காலை அடுத்த காரைக்கால்மேடு  மீனவ கிராமத்தைச் சேர்ந்த மீனவர் ராஜ்குமாரின் (43) விசைப்படகில், அவருடன்  15  மீனவர்கள் கடலுக்கு மீன்பிடிக்க கடந்த 2ம் தேதி சென்றனர். நேற்று அதிகாலை 2 மணியளவில்  நாகப்பட்டினம் மாவட்டம் கோடியக்கரைக்கு தென்கிழக்கே இலங்கை -இந்திய சர்வதேச  எல்லையில் மீன்பிடித்து கொண்டிருந்தனர். அப்போது காரைக்கால் மீனவர்களின் படகை இலங்கை கடற்படை வீரர்கள் துப்பாக்கி முனையில் சுற்றிவளைத்தனர்.  பின்னர்,  மீனவர்களின் படகில் ஏறி அதிலிருந்த விலை உயர்ந்த மீன்களை அள்ளி தங்களின்  படகில் ஏற்ற முயன்றனர். அப்போது நியாயம் கேட்ட 15 மீனவர்களை மீன் அள்ளப்பயன்படுத்தும் சவுள், இரும்பு ராடு, ரப்பர் குழாய் கொண்டு கண் மூடித்தனமாக  தாக்கினர்.இந்த தாக்குதலில் ராஜ்குமாருக்கு பலத்த காயம் ஏற்பட்டது. மற்ற 14 மீனவர்களும் இலங்கை  கடற்படையினரின் தாக்குதலால் வலியில் கதறினர்.தொடர்ந்து மீனவர்களின்  படகிலிருந்து விலையுயர்ந்த மீன்கள், மீன்பிடி உபகரணங்கள், மீனவர்களின்  கையிலிருந்த தங்க மோதிரம், நடுக்கடலில் படகின் இடத்தை அறியக்கூடிய ஜிபிஎஸ்  கருவி ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதன் மதிப்பு ரூ.5 லட்சம் என்று  கூறப்படுகிறது. இதுகுறித்து காரைக்கால்மேடு மீனவ பஞ்சாயத்தாருக்கும்,  மீன்வளத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தந்தனர். துறைமுகத்தை  அடைந்ததும் அவர்களை காரைக்கால்மேடு மீனவர்கள் காரைக்கால் அரசு பொது  மருத்துவமனையில் சேர்த்தனர். இதில் பலத்த காயமடைந்த ராஜ்குமாரின்  உடல்நிலை மோசமானதால், மேல் சிகிச்சைக்காக தஞ்சாவூர் அரசு  மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இலங்கை  கடற்படையினரால் மீனவர்கள் தாக்கப்பட்ட சம்பவம் காரைக்கால், நாகப்பட்டினம் உள்ளிட்ட  கடலோர மாவட்ட  மீனவ கிராமங்களில்  பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் மீனவ குடும்பத்தினர் கடும் அச்சத்தில் உள்ளனர்….

The post தொடரும் அட்டூழியத்தால் குடும்பத்தினர் அச்சம் காரைக்கால் மீனவர்கள் மீது இலங்கை கடற்படை தாக்குதல்: 15 பேர் படுகாயம் ஒருவர் கவலைக்கிடம் appeared first on Dinakaran.

Tags : Sri Lanka Navy ,Karaikal ,Sri Lankan Navy ,Dinakaran ,
× RELATED ரூ.3.90 கோடி செலவில் காரைக்கால் மீன்பிடி...